மதுரையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • 6 years ago
மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் காரில் 99 லட்சம் ரூபாய் பழைய 1000 , 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காரில் வந்த நவீன் சக்தி , ராஜசேகர், தர்மா மற்றும் சரவணன் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 நபர்கள் பரமக்குடியை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மதுரை மேலூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
Recommended