சிறார்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில் ரமணி

  • 6 years ago
சென்னை- கெல்லீஸ் அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் பல்நோக்கு வள மையத்தை தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில் ரமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் சிறார்கள் மீது 30 லட்சம் வழக்குகள் உள்ளன என்றும், 35 மில்லியன் இந்திய சிறுவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் தேவைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் கூறினார். சிறார்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முதலில் சிறுவர்களுக்கான சட்டம் இயற்றப்பட்டது எனவும் தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்தார்.

Recommended