ரயில் பயணத்தில் கவனம் தேவை…

  • 6 years ago
ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு பயிற்சி பெற்ற 200 போலீசார் விரைவில் பணியமர்த்தபட உள்ளதாக ரயில்வே கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைலேந்தபாபு கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்தாண்டு ரயில்வேயில் நடந்த விபத்துக்களில் 2384 பேர் பலியாகியுள்ளனர் என்றார். விபத்து மற்றும் குற்றங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்காக விரைவில் சிறப்பு பயிற்சி பெற்ற 200 போலீசார் நியமிக்கப்படஉள்ளதாக தெரிவித்தார். மதுரை, திண்டுக்கல், நெல்லை ரயில்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த சோனு சோனா, மின்ட் பிரசாத், நிதிஷ்குமார், உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார், ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் விழிப்புணர்வுடன் பயணிக்க வேண்டும் என்று சைலேந்தபாபு அறிவுறுத்தியுள்ளார்.

Railways Additional DGP, Cylindra Babu said that 200 special trained specialists were soon hired to prevent the crime.

Recommended