அமெரிக்காவில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

  • 6 years ago
சிகாகோ புறநகர் பகுதியான Little Village பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் இரண்டு வீடுகளில் பற்றிய தீ மளமளவென பரவ தொடங்கியது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Recommended