பணி நிறைவு விழாவில் தர்ணா- வீடியோ

  • 6 years ago
அரக்கோணம் நகராட்சியில் பணிபுரிந்து வெறும்கையோட வீடு திரும்புவதா.. பணி நிறைவு விழா புறக்கணிப்பு செய்து தர்ணாவில் சக பணியாளர்களுடன் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்

வேலூர்மாவட்டம்,அரக்கோணம் நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவராஜ் ஆகியோருக்கு நகராட்சி அலுவலகத்தில் பணி நிறைவு விழா நடத்தப்பட்டது. இதில் சுகாதாரதுறை ஆய்வாளர் தேவராஜ்க்கு எவ்வித பணி ஓய்வுக்கான பணப்பயன் தொகை வழங்காமல் நகராட்சியில் பணம் இல்லையென கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த தேவராஜ் நகராட்சியில் பணிபுரிந்து வெறும் கையோட வீடு திரும்புவதாக கூறி சக பணியாளர்களுடன் நிகழ்ச்சியை புறகனித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது நகராட்சியில் பணம் இல்லையென்று ஆகையால் 10நாட்கள் பிறகு தேதியிட்ட காசோலை வழங்குவதாக கூறினார். இதனையடுத்து ஓய்வு பெற்ற சுகாதாரதுறை ஆய்வாளர் தேவராஜ்க்கு காசோலை வழங்கப்பட்டு பின்னர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அரக்கோணம் நகராட்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

Des : Arakonam municipality working in municipality and returning home to vacation .. workshop boycotting workshop and co-workers in darnah health inspector

Recommended