சி.எம்.சி மருத்துவமனை செவிலியர் தூக்கு போட்டு தற்கொலை- வீடியோ

  • 6 years ago
வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள கரசமங்கலத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரின் மகள் ஜெனிபர் (23) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வந்தார் இவரை அதே மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வரும் லட்சுமி என்பவர் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருவதுடன் பணிசுமையை ஏற்படுத்தி தொடர்ந்து 3 வாரங்களாக இரவு பணிக்கு போட்டுள்ளார் இதுகுறித்து ஜெனிபர் கேட்டால் உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு சென்றுவிடு என தரக்குறைவாக திட்டியுள்ளார் நேற்று இரவு பணியை முடித்து இன்று கரசமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய ஜெனிபர் தலைமை செவிலியர் லட்சுமி தரக்குறைவாக திட்டியது குறித்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்தது குறித்தும் கூறி அழுதுள்ளார்கள் இந்த நிலையில் ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் அவரின் உடல் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த ஜெனிபரின் உறவினர்கள் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டதுடன் ஜெனிபரின் சாவுக்கு காரணமான தலைமை செவிலியர் லட்சுமியை கைது செய்ய கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உறவினர்களின் இந்த திடீர் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது லட்சுமியை கைது செய்யும் வரை ஜெனிபரின் உடலை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Recommended