கிரிகெட் விளையாடும் போது உருட்டு கட்டையால் தாக்கியதில் மாணவன் படுகாயம்- வீடியோ

  • 6 years ago
ஆம்பூர் தனியார் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் கிரிகெட் விளையாடும் போது மாணவனை சக மாணவன் உருட்டு கட்டையால் தாக்கியதில் மாணவன் படுகாயம்; அரசு மருத்துவமணையில் அனுமதி

வேலூர் மாவட்டம் ,ஆம்பூரில் அரசு நிதியுதவி பெறும் இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் சுமார் 2௦௦௦ -க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் லோகேஷ் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி மைதானத்தில் வகுப்பு மாணவர்களுடன் கிர்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளான்.அப்போது பக்கத்து வகுப்பறை மாணவன் கோட்டிலிங்கம் என்பவன் லோகேஷை பந்து போட வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனை லோகேஷ் மறுத்ததால் மாணவன் கோட்டிலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த உருட்டுகட்டையால் தாக்கியதில் லோகேஷ் தலை மற்றும் கை பகுதியில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்துள்ளான் அப்போது அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியர் நரேஷ் மாணவனுக்கு முதலுதவி அளிக்காமல் ஒரு வகுப்பறையில் படுக்கவைத்து அறையை பூட்டியுள்ளார்.இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்து மாணவனை பார்க்க சென்ற போது அவன் மயக்கமான நிலையில் அறைக்குள் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..பள்ளி மைதானத்தில் மாணவன் தாக்கப்பட்டதை தடுக்க தவறிய உடற்கல்வி ஆசிரியர் மற்றும் நிர்வாகம் முதலுதவி கூட அளிக்காமல் அறைக்குள் அடைத்து வைத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

des : The student was injured when a student was stabbed by a fellow student at a private school in Ampoor, Allowance at the Government Hospital

Recommended