பாஜக கட்டுப்பாட்டில் தமிழக அரசு! தேமுதிக சுதீஷ் பேட்டி

  • 6 years ago
தமிழக அரசு முழுவதுமாக பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழகத்தில் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத அரசாக உள்ளதாக தேமுதிக மாநில துணைச்செயலாளர் சுதீஷ் திருப்பூரில் பேட்டி.

தேமுதிக கட்சியின் திருப்பூர் வடக்கு தெற்கு மாவட்ட செயல்விரர்கள் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் துனை செயலாளர் சுதீஷ் கலந்து கொண்டார் . முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு முழுவதுமாக பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசு ஒரு செயல்படாத நிலையிலேயே உள்ளது . இதனால் தமிழகத்தில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளது . லாரி ஸ்டிரைக்கால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . செப்டம்பர் மாதம் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் விஜயகாந்த் சிறப்புரையாற்றுவார் . சென்னை மாற்றுத்திறநாளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது . குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பேட்டியளித்தார் . பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் திமுகவின் செயல்தலைவர் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியின் வருங்கால தலைவராகவும் , முதல்வராகவும் இருந்து வருகிறார் . அவரால் எப்போதும் கட்சியின் தலைவராகவும் , தமிழக முதல்வராகவும் ஆக முடியாது எனவும் , ரஜினி கட்சி துவங்கமாட்டார் எனவும் வருகின்ற தேர்தலில் தேமுதிக தான் ஆட்சியமைக்கும் எனவும் பேசினார் . இந்நிகழ்ழ்சியில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

DMDK Deputy Secretary Sudesh Tirupur interviewed in Tirupur said that the state government is controlled by the BJP as a whole.

Recommended