பெண்ணிடம் நகை பறித்து தப்ப முயன்ற கொள்ளையர்களை பிடித்து பொதுமக்கள் சரமாரி அடி உதை
  • 6 years ago
திருப்பத்தூர் அடுத்த தாமலேரி முத்தூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் லட்சுமணனி மனைவி சாந்தி காதில் அணித்திருந்த கம்பலை அறுந்துக்கொண்டு ஓட முயன்றனர். அவர்களை இருவரையும் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் இருவரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், அருண் என்பது தெரியவந்தது. இவர்கள் பல இடங்களில் தனியாக வரும் நபர்களிடம் மிரட்டி பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended