புதுவை சட்டசபையில் 7 ஆயிரத்து 530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

  • 6 years ago
புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதனையடுத்து புதுவைக்கு மத்திய அரசு குறிப்பிட்ட அளவுக்கு நிதி ஒதுக்கும். இந்த நிதி ஒதுக்குவதில் கால தாமதம் ஆவதால் கடந்த 7 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2 ஆயிரத்து 466 கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனியடுத்து மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கி முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். இதில் மொத்தம் 7 ஆயிரத்து 530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended