இஸ்லாமிய நாடுகளிலிருந்து அதிபர் டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் - அமெரிக்கா உச்சநீதிமன்றம்
  • 6 years ago
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபரான பின்னர், அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினார். ஆட்சிக்கு வந்ததுமே அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை முன்னெடுத்தார். இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டார். ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது. டொனால்டு டிரம்ப் அரசின் இம்முடிவிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இவ்வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளனர். இஸ்லாமியர்கள் மீது பேதம் காட்டும் செயல் என்ற எதிர்ப்புகளை நீதிமன்றம் நிராகரித்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு மீது அரசு காட்டிய அக்கறையை சுட்டிகாட்டியது. இதனையடுத்து 8 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்றுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended