18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்க கோரி 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

  • 6 years ago
அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள், பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்ட18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழக்கியது. அதில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார். இதற்கு மாறுபட்டு, நீதிபதி எம்.சுந்தர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பு அளித்தார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் இதனால் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற போவதாக 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்க கோரி, தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்காது என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளதாக 17 எம்.எல்.ஏ.க்களும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended