கடலில் பலத்த காற்று வீசுவதால் ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
  • 6 years ago
குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடற்பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தொண்டி, மண்டபம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. பலத்த காற்று வீசும் என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 20 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் பலத்தகாற்றின் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended