17 எம்எல்ஏக்கள் மனுவை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்- வீடியோ
  • 6 years ago
தகுதி நீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்து வரும் 27-ஆம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது. இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

17 MLAs files appeal plea in Supreme Court regarding Disqualification case.
Recommended