பிறந்த குழந்தையை காவல்நிலையத்தில் வீசிய தாய்-வீடியோ

  • 6 years ago
காவல் நிலையத்திற்கு முன் பிறந்த குழந்தையை வீசி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தின் முன் பிறந்து சிலமணி நேரமேயான குழந்தை ஒன்று சாலையின் ஓரத்தில் வீசப்பட்டிருந்தது. குழந்தை சாலையின் ஓரத்தில் கிடந்ததை கண்ட ரசூல் என்பவர் குழந்தையை எடுத்து காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் குழந்தையை பார்த்த போது சாலையில் இருந்த எரும்பு பூச்சிகள் கடித்ததில் குழந்தைக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு இருந்தது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பிறந்த குழந்தையை சாலையில் வீசிச்சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended