போலீஸ் பெயரில் கொள்ளை ஆவடியில் அதிர்ச்சி...
  • 6 years ago
இராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி வீட்டில் போலீஸ் என்று கூறி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் இராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கர். அவரது வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் தாங்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வருவதாகவும் மருமகன் ஆனந்த் மீது புகார் வந்திருப்பதால் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் சங்கர் வீட்டை சோதனை செய்ததுடன் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பெற்றுகொள்ளும்படி கூறி அனைத்தையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து சங்கர் ஆவடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ஆணையர் அலுவலக போலீசார் என்று கூறி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய தேடுதல் நடத்தி வருகின்றனர். போலீசார் என்று கூறி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A retired officer working in a military factory has claimed that the house was a police raid.
Recommended