அசுர வேகத்தில் வந்த அரசு பேருந்தால்...மாணவன் பலி- வீடியோ

  • 6 years ago
சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆற்காடு அடுத்த பெருங்கால் மேடு கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்ற கூலித்தொழிலாளியின் மகன். குமரேசன் இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்இந்நிலையில் காவேரிப்பாக்கத்தில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற குமரேசன் மீதுஎதிர்பாரதவிதமாக ஒசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுவிரைவு பேருந்து வேகமாக மோதியதில் மாணவன் குமரேசனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் தலையில் ரத்தம் உறைந்த நிலையில் குமரேசன்உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர் சாலையை கடக்க முயன்ற போது பள்ளி மாணவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏறப்டுத்தியுள்ளது.

Recommended