மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு
  • 6 years ago
1998ம் ஆண்டு நடந்த திரைப்பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. சல்மான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் விடுவிக்கப்பட்டனர். சல்மானுக்கு அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர், ராஜஸ்தானில் 1998ல் ஹிந்தி பட சூட்டிங்கில் இருந்தனர். அப்போது அங்குள்ள வனப் பகுதிக்கு வேட்டையாடசென்றுள்ளனர். இரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக, நடிகர்கள் சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Salman khan may face 6 years jail term in the jodhpur poaching case
Recommended