பாஜக பேனர்களை கிழித்த மர்ம நபர்கள் பற்றி விசாரணை!

  • 6 years ago
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை வரவேற்று இந்த பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜகவினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். கோவை பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பேசியவர் நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது, பாஜக மீது நடந்த கடைசி தாக்குதலாக இது இருக்கட்டும்.


BJP banners which were placed at Pudukottai bus stand damaged by unknown persons, the banners were placed to welcome Tamilisai Soundarrajan, investigations underway.

Recommended