வீடு மாறி வீசப்பட்ட பெட்ரோல் பாம்....போலீசார் அதிர்ச்சி....வீடியோ
  • 6 years ago

முன் விரோதத்தினால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசுவதற்கு பதில் பக்கத்தில் வசிக்கும் ஒப்பந்தகாரர் வீட்டில் குண்டு வீசிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது பங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி இருசப்பன் பெயரில் இருவர் பிரகாஷிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். இது குறித்து பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Recommended