ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  • 6 years ago
தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரி போலி என தெரிய வந்துள்ளது. போலீஸ் விசாரித்த போது அவர் சுவர் ஏறி குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா மீது போலீஸில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என கூறி ஒரு நபர் வந்தார். இதையடுத்து அங்கு மீடியாக்கள் குவிந்தன.


Income tax officials arrived to Deepa's house at T Nagar Chennai. Jayalalitha's brother's daughter is Deepa.

Recommended