பட்ஜெட் 2018: இது தெரியாம பிட்காய்ன்னு முதலீடு பண்றீங்களே...வீடியோ

  • 6 years ago
பிட்காய்ன் உள்ளிட்ட ஆன்லைன் கரென்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். ஆனால் இவற்றை நாம் இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோன்று ஆயிரத்துக்கும் அதிகமான கரன்சிகள் உள்ளன.

இந்தியாவில் ஒரு பிட்காயினின் ரூ.15 லட்சமாகும். இதன் மதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிட்காயினை பணம் கொடுத்தும் பங்குகளை விற்றும் வாங்கிக் கொள்ளலாம். தங்கத்துக்கு மாற்றாக இதை வாங்கிக் கொள்ளலாம்.இதற்கென வரி விதிப்பு முறையோ வங்கி கட்டுப்பாடுகளோ கிடையாது. அதனால் இதை அனைவரும் வாங்கி வருகின்றனர். கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிட்காயின்களை வைத்திருந்தவர்கள் இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டனர். கடந்த முறை பணமதிப்பிழப்பின்போது கருப்பு பணத்தை வைத்து பிட்காயின்களை வாங்கியுள்ளனரா என்று மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பிட்காயின்கள் அல்லது கிரிப்டோ கரென்சிகளை வாங்காதீர் என்று மத்திய நிதி அமைச்சகம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசோ இந்தியாவில் உள்ள எந்த ஒழுங்குமுறை அமைப்போ இந்த பிட்காயிகள் ஏஜென்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே இதில் முதலீடு செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை காயின்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டாலும் இவை சட்டரீதியில் செல்லும் காயின்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



Bitcoin and any kind of crypto currency are not considered as legitimate. Government will take steps to eradicate that type of currencies, says FM Arun Jaitley.

Recommended