Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/29/2018
இந்திய பெண்களிடையே பாதுகாப்பான உடலுறவு வழக்கம் பெருகியுள்ளதாக அரசின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2015-16ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. திருமணமாகாத ஆனால் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்கள் மற்றும் திருமணமான ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் வெளியான சில சுவாரசிய தகவல்கள் இதோ.

திருமணமாகாத ஆனால் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களிடையே, கடந்த பத்தாண்டுகளில், ஆணுறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு 2 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20-24 வயதுக்கு நடுவேயான பெண்கள்தான் அதிக அளவுக்கு தங்கள் பார்ட்னர் ஆணுறை அணிந்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

8 ஆண்களில் 3 பேர் பாதுகாப்பான உறவு என்பது பெண்கள் தொடர்புடையது மட்டுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர். தேவையற்ற கர்ப்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அதை பெண்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனநிலையில் உள்ளவர்கள் இவர்கள்.

A larger number of unmarried, sexually active women are now opting for safe sex.

Category

🗞
News

Recommended