சிறுவனை அவனது தந்தை தூக்கி போட்டு மிதிக்கும் காட்சி-வீடியோ

  • 6 years ago
பொய் கூறியதற்காக சிறுவனை அவனது தந்தை தூக்கி போட்டு மிதிக்கும் காட்சிகள் 3 மாதங்கள் கழித்து தற்போது வெளியே வந்துள்ளது. இதையடுத்து அந்த தந்தை கைது செய்யப்பட்டார்.பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். மகேந்திரனின் செல்போன் பழுதடைந்து விட்டதால் கடையில் கொடுக்கப்பட்டது.அந்த போன் சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக கடைக்காரர் அதில் உள்ள ஒரு வீடியோவை ப்ளே செய்து பார்த்துள்ளார். அதை பார்த்தவருக்கு தூக்கி வாரி போட்டது.அந்த வீடியோவில் செல்போன் பழுது பார்க்க கொடுத்த மகேந்திரன் தனது 10 வயது சிறுவன் பொய் கூறியதற்காக முதலில் மொபைல் சார்ஜர் மூலம் தாக்கினார். பின்னர் பெல்ட்டாலும் கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்.


A 37-year-old man from Bengaluru has been arrested after a disturbing video of him mercilessly thrashing his 10-year-old son went viral on social media. The incident has been reported in Bengaluru.

Recommended