வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு விளையாட வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..!!

  • 6 years ago
சென்னையில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையை குளியறையில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை நேரு விளையாட்டரங்கில் தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க பல மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் வந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். ஒரு வீராங்கனை குளிப்பதை மர்மநபர் ஒருவர் குளியலறை ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததார். இதைப்பார்த்த அந்த வீராங்கனை கூச்சலிட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்தவரை பிடித்து விசாரித்தனை மேற்கொண்டனர். அவர் விடுதியில் வேலை பார்க்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலாவுதீன் உசேன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து நீதிமன்ற காவலில் குற்றவாளியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு விளையாட வந்த இடத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Periyamedu police station officials arrested a west bengal man Alautheen who was allegedly shooting video of a basket ball player while she was bathing in hotel.

Recommended