கொல்லைப்புறமாக தமிழகத்திற்குள் வர நினைத்தால் முடியாது... விட்டு விளாசிய பாரதிராஜா!

  • 6 years ago
செய்யாத தவறுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் முன் வைப்பதற்கு தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக நுழைய முயற்சிப்பதே காரணம் என்று இயக்குனர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். இனியும் இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்தால் அவர்களின் தலையை நான் வெட்டுவேன் என்று பாரதிராஜா உணர்வுப் பூர்வமாகக் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற போது பாரதிராஜா பேசியதாவது : எனக்கும் வைரமுத்துவிற்கும் ஆயிரம் பிச்னைகள் இருக்கலாம், ஆனால் இலக்கியத்திற்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டு யாராலும் ஈடு செய்ய முடியாதது.

மதம் என்பது எங்களுக்கு எப்போதுமே கிடையாது. மீண்டும் எங்களை ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள், நாங்கள் ஆண்ட பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர் ஆக்கி விடாதீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வா, போ சாப்பிடு விருந்தோம்பல் செய்கிறோம், ஏனென்றால் நீங்கள் விருந்தாளிகள். ஆனால் என் படுக்கையில் தான் படுப்பேன் என்று சொல்லாதே.

என் படுக்கையில் பங்கு கேட்க நீ யார்? 10 வருஷமாக உங்களுக்கு பிள்ளையே இல்லை நான் பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார்களா, எங்களுக்கு தலைமை இல்லை என்று யார் சொன்னார்கள். நாங்கள் பொறுத்திருந்தோம், இன்று தமிழகத்தில் கோடித் கோடித் தலைவர்கள் உள்ளனர். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்கிறார்கள் அதனால் வன்முறையை தூண்டும் விதமாக பேசக் கூடாது என்று அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை. வைரமுத்துவின் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னவரை பிடித்து உள்ளே தள்ள வேண்டாமா? அமைச்சர்கள் பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போய்விட்டார்கள்

Veteran film director Bharathiraja warns if criticism against Vaiyamuthu continues he will cut off their heads and also accuses that with this issue BJP is trying to enter into the state by backdoor.

Recommended