போர் விமானத்தில் பயணித்து சோதனை செய்த நிர்மலா சீதாராம்

  • 6 years ago
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார். இதற்காக அவர் சுகோய் 30எம்கேஐ விமானத்தை பயன்படுத்தி இருக்கிறார். இது இரண்டு பேர் பயணிக்க கூடிய விமானம் ஆகும். இவர் பாதுகாப்பு சோதனைகள் செய்வதற்காக இப்படி பறந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சில முக்கிய நபர்கள் மட்டுமே இப்படி போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பறந்த போர் விமானம் சுகோய் 30எம்கேஐ விமானம் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் அமரலாம். நிர்மலா சீதாராமனும் முதல் நிலை பைலட்டும் இதில் பயணித்தார்கள்

இன்று காலை நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் சென்றடைந்தார். அங்கு இருக்கும் ஜோத்பூர் விமான படை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் உரையாடினார். பின் அங்கிருந்து சுகோய் போர் விமானத்தில் கிளம்பி இருக்கிறார்.

Recommended