தோசையை காணோம் என்று போலீசில் புகார் கொடுக்கும் குஷ்பூ..!!

  • 6 years ago
என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை ட்விட்டரில் இருப்பார். தன்னுடைய சொந்த வாழ்க்கை, அரசியல், நாட்டு நடப்புகள் பற்றி ட்வீட்டுவார்.

இந்நிலையில் அவர் தோசை பற்றி ட்வீட்டியுள்ளார்.

பிருந்தா கோபால், அனு உங்களை மிஸ் செய்கிறேன். என் தோசை சுப்பு பஞ்சுவை காணவில்லை. சுப்புவை காணவில்லை என்று புகார் அளிக்க வேண்டுமா என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

தயாரிப்பாளரும், நடிகருமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடிகை குஷ்புவின் நண்பர். அதனால் தான் அவர் சுப்புவை செல்லமாக தோசை என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் யாரோ ஒரு லூசு ராஜா, குமாரை குஷ்பு ட்விட்டரில் வெளுத்து வாங்கியிருந்தார். லூசு ராஜா என்பதை பார்த்ததும் நெட்டிசன்களுக்கு ஒருவரின் நினைவு வந்துவிட்டது.


Actress cum congress spokesperson Khushbu Sundar tweeted that, 'Missing you di my brindagopal n anustylist ❤❤❤❤ and my dosai subbu6panchu is missing..should we file a case saying #Subbu is lost???'

Recommended