போக்குவரத்து ஊழியர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இனி இல்லை - அமைச்சர் அறிவிப்பு- வீடியோ

  • 6 years ago
தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை. குறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியபோது அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள்தான் கவுரவம் பார்க்கிறார்கள்.

Transport Minister M.R.Vijayabaskar says that TN government has not ready to talk with Transport Union Members.

Recommended