சட்டசபையில் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சியினர்- வீடியோ

  • 6 years ago
சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை போலவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை ஆரம்பித்ததுமே, எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

எதிர்க்கட்சிகள் கோஷங்களுக்கு நடுவேயும், ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார். இதையடுத்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு அவை அமைதியானது. ஆளுநர் அரசின் பல்வேறு திட்டங்களையும், முந்தைய சாதனைகளையும் தனது உரையில் குறிப்பிட்டார்.

The DMK and the Congress MLAs walked out of the assembly today to ignore the Governor's speech. Karunas, Thaniyarasu and Tamimun Ansari who had won the double-leaf symbol also walked out.