சசிகலா உறவுகளை விடாமல் விரட்டும் ஐடி துறை- வீடியோ

  • 6 years ago
சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, இளவரசியின் மருமகன் வீடு, கோவை தனியார் கல்லூரியில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சசிகலா, தினகரன் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்கள் உள்ளிட்ட 200 இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை, கொடநாடு உள்ளிட்ட இடங்களிலும் பெங்களூரு, ஹைதராபாத், புதுச்சேரியிலும் 2000 பேர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து விவேக், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டவர்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து தனித் தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அனைத்து தகவல்களும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் சசிகலா உறவினர், இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான இடம் உட்பட 14 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று 2வது முறையாக திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்றும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது

படப்பை அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோன், அடையார் இந்திரா நகரில் உள்ள இளவரசி மருமகன் கார்த்திகேயன் வீடு, மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பர் குடோனில் சோதனை நடைபெற்றது.


Income Tax Department officials conducted raids at a private engineering college in Coimbatore.

Recommended