அடுத்த படத்திற்கு பாகுபலியை நாயகனாக்கிய அட்லீ !!- வீடியோ

  • 6 years ago
இயக்குநர் அட்லீ தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். அவர் இயக்கிய முதல் படமான 'ராஜாராணி' செம ஹிட் ஆனதை அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார். விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'தெறி' ஹிட் ஆனதால் மீண்டும் விஜய்யோடு 'மெர்சல்' படத்தில் கைகோர்த்தார். இந்நிலையில் அடுத்து அட்லீ என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
'மெர்சல்' படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் அட்லீ இயக்கும் அடுத்த படத்திற்கும் கதை எழுதுவார் எனக் கூறப்படுகிறது.
விஜயேந்திர பிரசாத் தான் பாகுபலி படத்துக்கும் கதை எழுதினார். அவர் மூலமாகவே பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது 'சாஹோ' படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இவை அனைத்தும் உறுதியற்ற தகவல்கள் என்பதால் அட்லீயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும்.


Director Atlee continues to make the hit films. In this situation, Atlee is expected to direct the film of the famous telugu actor Prabhas. Prabhas, who is currently acting in 'Saaho', is said to be filming Atlee's next film after completing its shooting.

Recommended