திமுகவின் தன்மானத்துடன் உரசிப் பார்க்கவேண்டாம்-ஸ்டாலின்- வீடியோ
  • 6 years ago
டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுக உதவியதாக அவதூறு பரப்புவோருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் தன்மானத்துடன் உரசிப் பார்க்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற திமுக மறைமுகமாக உதவியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.

திமுகவைப் பற்றி அவதூறு பரப்புவோர் அவமானப்படுவது நிச்சயம் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுக உதவியதாக அவதூறு பரப்புவோருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்கேநகர் இடைத் தேர்தலில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு பணநாயகம் கோலோச்சியது என்றும் அவர் கூறியுள்ளார். பணநாயகத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி பலியானதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் அதிமுக இருதரப்பு வேட்பாளர்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஜனநாயகத்தை விலைபேசினர் என்றும் அவர் கூறினார். திமுகவின் தனித்தன்மையுடனும் தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.



DMK working pressident Stalin condemns for defamaition on DMK had helped TTV Dinakaran's victory. Stalin has also warned that dont test DMK's selfrespect. DMK is the oly party who can change the govt he added. He said Money killed Democracy in RK Nagar by poll.
Recommended