தேசிய விருது வாங்காம சினிமாவை விட்டு போக மாட்டேன் - அஞ்சலி- வீடியோ
  • 6 years ago
நடிகை அஞ்சலி, இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும், தேசிய விருது வாங்காமல் எப்படி திரையுலகை விட்டு போகமுடியும் எனவும் கூறியிருக்கிறார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தினசரி செய்தியாக இருந்த அஞ்சலி தற்போது சத்தம் இல்லாமல் கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட அரை டஜன் படங்களோடு பிஸியாக இருக்கிறார். விரைவில் இவர் ஜெய் ஜோடியாக நடித்திருக்கும் 'பலூன்' திரைப்படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தை சினிஷ் இயக்கியிருக்கிறார்.
ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் வசந்தபாலன் இயக்கிய 'அங்காடித்தெரு' படத்தின் மூலம் சிறப்பாகப் பேசப்பட்டார்.
தற்போது வினு ஜோசப் இயக்கத்தில், பிஜு மேனன் நடிக்கும் 'ரோசாப்பூ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்தப் படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மலையாளத்தில் அஞ்சலி நடித்து கடைசியாக வந்த படம் 2011-ல் வெளிவந்த 'பய்யன்ஸ்' திரைப்படம் தான். அந்தப் படம் சரியாகப் போகாததால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த அஞ்சலி இப்போது மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.


Actress Anjali has said that she does not have the idea of ​​getting married and can not leave cinema with national award. Anjali is now busy with half a dozen films, including Tamil, Telugu and Malayalam. Soon after, she will be pairing up with Jai in 'Balloon'.
Recommended