ஐபிஎல், ஆஷஸ் தொடரில் சூதாட்டம் நடத்துவது நாங்கள் தான்!- வீடியோ

  • 6 years ago
ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்த போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சூதாட்டத்தை இந்தியாவை சேர்ந்த சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற இரண்டு நபர்கள் நடத்த இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வீரர்களிடம் பேசி அதன் மூலம் அவர்களை சூதாட்டம் செய்ய வைப்பார்கள். பின் அதை வைத்து வெவ்வேறு நாடுகளில் இருக்கும் சூதாட்ட பணக்காரர்களிடம் இருந்து இவர்கள் பணம் பெறுவார்கள். தற்போது இதுகுறித்து அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நிறைய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு இங்கிலாந்திற்கு இடையில் ஆஷஸ் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடந்து கொண்டு உள்ளது. இந்த போட்டியில் சூதாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சூதாட்டத்தை இந்தியாவை சேர்த்த சூதாட்ட நபர்களான சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகியோர் செய்ய இருக்கின்றனர். இவர்களுக்கும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

இவர்களுக்கு பின் இந்தியாவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இருப்பதாக தனியார் பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவிலும் 'தி சைலன்ட் மேன்' என்ற நபர் இவர்களுக்கு பின் இருப்பதாக கூறியுள்ளனர். இவர்கள் இருவரும்தான் சூதாட்டம் குறித்த விவரங்களை கேட்பதும், தருவதுமாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா எப்படி சொல்கிறார்களே அதை வைத்து மற்ற நபர்கள் அனைவரும் சூதாட்டத்தில் பணம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சில கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீரர்கள் அனைவரும் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள். எந்த ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும் என்பதை இவர்கள் ஏற்கனவே சொல்லி இருப்பார்கள். அதை வைத்து சூதாட்ட உலகத்தில் இருக்கும் பெரிய நபர்கள் இவர்கள் மீது பணம் கட்டுவார்கள்.




The Sun claimed this week (Complete transcript from The Sun's investigation) undercover reporters had been offered the opportunity to purchase details of supposed rigged periods of play in the match between Australia and England at the WACA – the Test due to get underway on Thursday (December 14).

Recommended