போட்டோக்கள் வெளியானதால் அம்பலமான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பொய்கள்- வீடியோ

  • 6 years ago
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக 3 பெண்கள் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளதோடு, நாடாளுமன்ற விசாரணையை கோரியுள்ளனர். ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹோல்வே மற்றும் ரேச்சல் க்ரூக்ஸ் ஆகிய 3 பெண்மணிகள் நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் ஒருமுறை ட்ரம்ப் மீது அழுத்தமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். "16 பெண்களும் மற்றும் டொனால்டு டிரம்பும்" என்ற ஆவணப்படத்தை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது 'பிரேவ் நியூ பிலிம்ஸ்' நிறுவனம். அதே நிறுவனம்தான் இப்பெண்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த மூன்று பெண்களும் டொனால்டு டிரம்ப் மீதான தங்களது குற்றச்சாட்டுகளை தனித்தனியாக வெளியிட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் அக்குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த அமெரிக்க அழகி போட்டியின்போது டிரம்ப் தன்னிடமும் தனது சக போட்டியாளர்களிடமும் தவறான முறையில் பார்வையை செலுத்தியதாக ஹோல்வே குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் அனைவரையும் வரிசையாக நிறுத்தினார். என்னை ஒரு இறைச்சி துண்டு போலவே டிரம்ப் பார்த்தார் என்று அப்போது 20 வயதிலிருந்த முன்னாள் வட கரோலினா அழகி கூறினார்.

தற்போது 70 வயதாகும் ஜெசிகா லீட்ஸ், தனக்கு 38 வயதிருக்கும்போது நியூயார்க்குக்கு சென்ற விமானத்தின் முதல் வகுப்பில் டொனால்டு டிரம்ப் அருகே அமர்ந்தபோது அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அப்படியே தன்மீது படுத்து புரண்டதாகவும் பேட்டியில் தெரிவித்தார். டிரம்ப் எவ்வகையான மனிதர் என்பதை வெளிப்படுத்தவேவ இப்போது இதை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended