விஷால் வேட்புமனு விவகாரத்தில் மீண்டும் திருப்பம்... வீடியோ

  • 6 years ago
விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும் இன்று மாலை 3 மணிக்குள் விளக்கமளித்தால் மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக அவர் ஆர்கே நகர் தொகு தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நேற்று முன்தினம் அவரது மனுவை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்திலும் விஷால் புகார் அளித்தார். ஆளும்கட்சியின் மிரட்டலாலேயே தன்னை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதாக குற்றம்சாட்டினார் விஷால்.

மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். இருப்பினும் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விஷாலின் வேட்பு மனுவை ஏற்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

விஷாலின் பெயரை முன்மொழிந்து பின்னர் மறுத்த அந்த 2 பேரும் தேர்தல் ஆணையத்தில் இன்று மாலை 3 மணிக்குள் விளக்கமளித்தால் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Recommended