மூன்று எம்பிக்களும் உளவாளிகளாகதான் சென்றுள்ளனர் தினகரன் ஆவேச பேட்டி- வீடியோ

  • 6 years ago
தன்னுடைய அனுமதி பெற்று தான் எம்பிக்கள் மூன்று பேரும் எடப்பாடி அணி பக்கம் சென்றதாகவும் அந்த அணியில் நடைபெறும் நிகழ்வுகளை எம்பிக்கள் மூலம் தெரிந்துகொள்ள வாய்ப்பு அமையும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

திருச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் வருமான வரி சோதனை ஆர் கே நகர் இடைதேர்தல் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும் என்றார் . வரும் ஆர் கே நகர் இடைதேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார் .தனது அணியில் இருந்த எம்.பி. நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந், எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகிறோர் தன்னுடைய அனுமதி பெற்று தான் எடப்பாடி அணி பக்கம் சென்றதாகவும் அவர்கள் மூலம் எடப்பாடி ஒபிஎஸ் கூட்டணியில் நடைபெறும் நிகழ்வுகளை தெரிந்துகொள்வேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

Des : TTV Dinakaran said that all three of the MPs went to Edappadi team to get their approval and get the chance to know the events in the team.

Recommended