அமைச்சர்களின் பேச்சுக்கு ஆப்பு வைத்தார் முதலமைச்சர்- வீடியோ
  • 6 years ago
அதிமுக செய்திதொடர்பாளர்களை தவிர வேறு யாரும் எந்த செய்திகளையும் வெளியிட கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் ஆர் கே நகர் இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்த ஆட்சி மன்ற கூட்டம் ந்டைபெற்றது

அக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ பன்னீர்செல்வம் , அதிமுக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . அப்போது ஒபி எஸ் அணியை சேர்ந்த எம்பி மைத்திரேயன் தமிழக அமைச்சர்கள் தங்கள் அணியை பற்றி ஊடகங்கைளில் தவறான கருத்துகலை கூறி வருவதாக தெரிவித்தார்

அதற்கு அமைச்சர் சி வி சண்முகம் , வளர்மதி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது

தீடிரென்று எடப்பாடி பழனிச்சாமி எழுந்து நின்று அனைவரையும் அமைதியாக இருக்க கூறியதுடன் அதிமுக தொடர்பான எந்த செய்தியானாலும் செய்தி தொடர்பாளர் மட்டும் தான் இனிமேல் வெளியிடுவார் என்றும் மற்றவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

Des : Chief Minister Edappadi Palanissam ordered no one to release any news except AIADMK

Recommended