பெங்களூரில் கணவன் கண் எதிரில் பெண் கூட்டு பலாத்காரம்..வீடியோ

  • 6 years ago
26 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 23 வயது ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூர், மாதநாயக்கனஹள்ளி காவல் சரகத்திலுள்ள சித்தனஹொசஹள்ளி பகுதியில் வசித்து வருபவர், சித்தண்ணா மனைவி ரத்னா (26, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ரத்னா, கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று, நான்கு பேர் கொண்ட கும்பல், இவரது வீட்டுக்குள் புகுந்து கணவன் சித்தண்ணாவை அடித்து போட்டு, கத்தியை காட்டி மிரட்டி ரத்னாவை கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்தபோது நால்வரும் குடி போதையில் இருந்துள்ளனர்.

சித்தண்ணாவை வீட்டை விட்டு சிறிது தூரத்திற்கு கொண்டு சென்று அடித்து போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வீடு திரும்பிய சித்தண்ணா இதுகுறித்து, மாதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரத்னா அளித்த புகாரில், 23 வயதாகவும் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவரும், அவரது நண்பரும் ராஜகோபால் நகர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பிடித்த ராகவேந்திரா (32), புனித் (22) மற்றும் விஜய்குமார் ஆகியோர்தான் தன்னை மாறிமாறி கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

Recommended