கமல் லாயக்கில்லை.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர்- வீடியோ

  • 7 years ago
அரசியலுக்கு யார் தகுதியானவர் என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் சீமான்தான் தற்போது சரியான பாதையில் செல்கிறார் என்று கூறியுள்ளார்.
சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பண விவகாரத்தில் அன்புச் செழியன் கறார் பேர்வழி என கேள்விப்பட்டுள்ளேன். அதனால்தான் நான் அவருடன் வியாபாரம் வைத்துக் கொள்ளவில்லை. அன்புச்செழியனுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என்று எனக்கு தெரியும். ஆனால் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது.அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் இதுவரை காவல் துறை சரியாகதான் செயல்படுகிறதாக நான் கருதுகிறேன். ஆனால் தலைமறைவாக உள்ள அன்புச்செழியன் பிடிப்படாமல் இருக்க அரசியல்வாதி யாரோ பின்புலமாக உள்ளார். அவர் யாரென்றுதான் தெரியவில்லை.தற்போது நடைபெறும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி சரியாக போய் கொண்டிருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சரியான அளவுகோல் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகும். இந்த இடைத்தேர்தலில் என்னதான் பணம் கொடுத்தாலும் இந்த தேர்தலின் முடிவு என்பது வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியதாகத்தான் இருக்கும். இந்த தேர்தலில் நிச்சயமாக ஆளும்கட்சியின் பலம் இருக்கும். அதிகார துஷ்பிரயோகங்கள் சில இடங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். மத்திய அரசும் ஆளும் கட்சிக்கு உதவியாக இருக்கும். இதை நான் மறுக்கவே இல்லை.


Director Ameer says that Kamal is not fit for politics, he has to work more. Seeman goes in a right direction.
tags:

Recommended