டிசம்பர் 14ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்?... இன்று தேதி அறிவிக்கிறதா ஆணையம்?- வீடியோ

  • 6 years ago
சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி ஜெயலலிதா மறைவையடுத்து கடந்த 11 மாதங்களாக காலியாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு வரலாறு காணாத வகையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு வலு சேர்ப்பது போல அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் போது ஆர்.கே.நகர் தேர்தலில் செய்யப்பட்ட பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது.

இதனிடையே ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணி கட்சியின் சின்னம், பெயருக்கு உரிமை கொண்டாடியதால் சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஆர்.கே நகர் இடைத் தேர்தலை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்து வந்தது.

Election comission may announce R.K.Nagar bye eletion date today, as Highcourt given deadline as December 31. Tamilnadu CEO Rajesh Lakhoni is at Delhi for finalising the election date.

Recommended