மதுரை ஆதீனம் மீது நிதி மோசடி புகார்- வீடியோ

  • 6 years ago
ஆதீன மடத்திற்குற்குட்பட்ட நிதியை ஆதீனம் தவறுதலாக சொந்த செலவுக்கு பயன்படுத்தி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மதுரையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் வீரமுருகன் விளக்குதூண் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ஆதீன மடத்தின் நிதிகளை மதுரை ஆதீனம் சொந்த செலவுக்காக தவறுதலாக பயன்படுத்தி வருவதாகவும், மடத்திற்குட்ட கடைகளை வாடகைக்கு எடுப்பவர்களிடம் 30 லட்சம் பெற்றுக்கொண்டு 15 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் ரசீதுகள் வழங்குவதாகவும் ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des : The film director has complained to the police that he has been using the money back to his own money and that he is using it for his own expenses.

Recommended