பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெ.மறைவுக்கு பிறகு எழுதி வாங்கிய விவேக்!- வீடியோ

  • 6 years ago
பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விவேக் வாங்கிக்கொண்டதாக வருமான வரித்துறைக்கு கூறப்பட்ட தகவலால் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்களை வளைத்து வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பல கணக்கில் வராத ஆவணங்கள்ள சிக்கியதால் 5 நாள் சோதனை முடிந்த கையோடு விவேக்கை விசாரணைக்கு அழைத்து சென்றது வருமான வரித்துறை. யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பூங்குன்றன் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி வரை சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Vivek Jayaraman got back all the properties from Poongudran after the demise of Jayalalitha information passed to Income tax department. Income tax raid was conducted last week in Sasikala family.

Recommended