ஆகாஷ் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை- வீடியோ

  • 6 years ago
ஒரு தலை காதலால் இளம் பெண்ணை டர்பன்ட் ஆயிலுடன் பெட்ரோலை கலந்து கொலை செய்த இளைஞரின் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேனுகா மற்றும் மகள்கள் இந்துஜா மற்றும் நிவேதா ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சண்முகத்தின் மகள் இந்துஜா வேளச்சேரியில் படிக்கும் போது அவருடன் படித்த ஆகாஷிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் சண்முகத்திற்கு தெரியவர தனது உறவுக்கார பையனுடன் இந்துஜாவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது பற்றி ஆகாஷிற்கு தெரியவர நேற்று இந்துஜா வீட்டிற்கு சென்ற ஆகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு இந்துஜா மறுக்க ஆத்திரமடைந்த ஆகாஷ் தன் கையில் வைத்திருந்த டர்பன்ட் ஆயில் கலந்த பெட்ரோலை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார். இதில் இந்துஜா சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்துஜாவை காப்பாற்ற சென்ற தாய் ரேனுகா மற்றும் நிவேதா ஆகியோர் பலத்த தீ காயங்கள் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்துஜாவை பல ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் தன்னுடைய காதலை இந்துஜா ஏற்க மறுத்ததால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான். டர்பன்ட் ஆயிலுடன் பெட்ரோல் கலந்து தீவைத்தால் உடனே எரியும் என்று தனது நண்பர்கள் தெரிவித்ததால் டர்பன்ட் ஆயிலுடன் இந்துஜா வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளான். முதலில் இந்துஜாவை கொலை செய்யும் திட்டம் இல்லை என்றும் தன் காதலை அவர் மறுக்கவே ஆத்திரமடைந்து கொலைசெய்ததாகவும் ஆகாஷ் போலீசாரிடம் கூறியுள்ளான். மேலும் ஆகாஷிற்கு டர்பன்ட் ஆயிலுடன் பெட்ரோல் கலந்தால் உடனே எரியும் என்று ஆலோசனை கொடுத்த நண்பர்கள் யார் என்று தெரிய ஆகாஷின் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dis : The police are conducting investigations into the murder of a young girl with a head-on love with a turbant

Recommended