இரட்டை இலை எங்களுக்கே... அடித்துச்சொல்லும் அமைச்சர்- வீடியோ

  • 7 years ago
இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக் உறுதியாக கிடைக்கும் என்று அமைச்சர் சி.சி சண்முகம் கூறியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக இறுதி வாதத்தை தாக்கல் செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக இன்று இறுதி வாதம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். ஒருங்கிணைந்த அணிகளும், தினகரன் அணியும் இன்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதனைக் கைப்பற்றுவது தொடர்பாக, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி.தினகரன் அணி இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகிய இரு தரப்பினரும், தனித்தனியே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.இதையடுத்து, இரட்டை இலை வழக்கின் விசாரணை கடந்த மாதம் 6ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் கடந்த 8ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களைக் கூறி, தங்களுக்கே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதிட்டனர்.

Two leaves Symbol case today final hearing in Election commission, OPS EPS team and TTV Dinakaran team submit their written statements.

Recommended