சசிகலாவுக்கு அடுத்த நெருக்கடி.. சிறையில் சலுகை பெற்றது உண்மை..வீடியோ

  • 7 years ago
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த விசாரணை குழு அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சசிகலா வெளியே ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் அவருக்கு சிறப்பு சமையல், மெத்தை விரிப்புகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி பரபரப்பு அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. யாக இருந்த சத்தியநாராயணராவிடம் வழங்கினார்.

அந்த அறிக்கையில் சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சட்டவிரோதமாக இந்த வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், இதுபற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உயர்மட்ட குழுவினர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான சத்தியநாராயணராவ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
ஒரு வாரத்தில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி அந்த குழுவுக்கு முதலில் கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பின்னர் அந்த குழுவுக்கு மேலும் கால அவகாசத்தை அரசு வழங்கியது. மொத்தம் 2 தடவை இந்த குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை சமீபத்தில் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது.

ஒரு வாரத்தில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி அந்த குழுவுக்கு முதலில் கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பின்னர் அந்த குழுவுக்கு மேலும் கால அவகாசத்தை அரசு வழங்கியது. மொத்தம் 2 தடவை இந்த குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை சமீபத்தில் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது.

Vinay Kumar submit his report on Sasikala's 'jail bribery' case, says Minister Ramalinga Reddy.

Recommended