லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் மூலம் பெரும் தொகை கைமாற்றம்- வீடியோ

  • 7 years ago
லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் மூலம் பெரும் தொகை சசிகலா குடும்பத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நமது எம்ஜிஆர், ஜெயா டிவி உள்ளிட்ட அலுவலகங்களில் இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோதனையில் புகாரை உறுதிப்படுத்தும் வகையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான லட்சுமி ஜுவல்லரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர். லட்சுமி ஜுவல்லரி புதுச்சேரி, சிதம்பரம் மற்றும் காரைக்காலில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

A large amount transfered from Lakshmi jewellors owner to Sasikala family Income tax official said. Income tax raid continueing as second day in sasikala family.