பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்....சாணி, உரம் இருந்ததா?- வீடியோ
  • 6 years ago
புதுவை பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள் இருந்ததால்தான் அங்கே போனால் சாணிதான் கிடைக்கும்.. உரம்தான் கிடைக்கும்... ஏதாவது வைத்துவிட்டு பழிபோடுவார்கள் என சகட்டுமேனிக்கு செய்தியாளர்களிடம் தினகரன் உளறினாரா? என்கிற கேஎள்வி எழுந்துள்ளது. தினகரனின் சென்னை வீடு தவிர, சசிகலா சிறைவாசம் அனுபவிக்கும் பரப்பன அக்ரகார சிறையைத் தவிர அந்த குடும்பத்தின் அத்தனை உறவினர்களையும் பினாமிகளையும் ஒரே நாளில் அமுக்கிவிட்டது வருமானத்துறை. 190 இடங்களில் 2,000 அதிகாரிகளைக் கொண்டு சசிகலா குடும்பத்தினரை வளைத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது வருமான வரித்துறை. சென்னை தினகரன் வீட்டுக்கு காலையில் ஒரு வருமான வரித்துறை சென்றிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் மிகவும் பதற்றத்துடன் பேசினார் தினகரன்.அப்போது, என்னுடைய சென்னை வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. ஆனால் புதுவையில் உள்ள பண்ணை வீட்டுக்கு போயுள்ளார்கள். 2 மாதத்துக்கு ஒருமுறைதான் அங்கே போவேன்.. அங்கே போனால் சாணி, உரம்தான் கிடைக்கும். எதுவும் இருக்காது. இருந்தாலும் எதையாவது வைத்துவிட்டு பழிபோடுவார்கள் என்பதற்காக கட்சியினர் மற்றும் வழக்கறிஞரை அங்கே போக சொல்லியிருக்கிறேன் என மீண்டும் மீண்டும் ரொம்ப பதற்றத்துடன் கூறினார் தினகரன்.

Income Tax officials conducted a raid at Dinakaran's farm house at Auroville in Puducherry on Thursday. The officials were shocked over the underground secret rooms in the Dinakaran's Farm House.
Recommended