மூன்று வயது சிறுமிக்கு ஆறுமாதமாக பாலியல் தொல்லை...வீடியோ

  • 7 years ago
மும்பையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமிக்கு அவள் பள்ளியின் நிறுவனர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். ஆறுமாதமாக அந்த சிறுமிக்கு அந்த நிறுவனர் பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தெரிய வந்து இருக்கிறது.

இந்த கொடூரமான சம்பவத்தில் தற்போது அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த ஆறுமாதமாக நடந்த வந்த இந்த விசாரணையில் தற்போதுதான் விடை கிடைத்து இருக்கிறது. பள்ளியின் நிறுவனரே இப்படி ஒரு காரியத்தை செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மும்பையின் அந்தேரி என்ற பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்தார் அந்த 3 வயது சிறுமி. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் அவளுக்கு சரியாகமல் இருந்து இருக்கிறது. இதையடுத்து சந்தேகம் அடைந்து அவளது பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அதில் அவளுக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்து தெரிய வந்து இருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் போலீசுக்கு புகார் அளித்து இருக்கின்றனர்.

A 3 year old girl har@ssed by school founder in Mumbai . The Mumbai police has arrested the 57-year-old trustee and co-founder of the school yesterday for allegedly $exually assaulting her. They have arrested her class teacher also.


Recommended